
பணிக்கூற்று
சுயகற்றலும் சுயசிந்தனையுமுடைய நற்பிரஜைகளை உருவாக்கல்
எங்கள் பள்ளிக்கு வரவேற்கிறோம்

1965ம் ஆண்டிற்கு முன்பு காலை மாலை என ப/டிக்வெல்ல பாடசாலையில், காலை சிங்கள மாணவர்களும், மாலை தமிழ் மாணவர்களும் கல்வி கற்றனர். 1965 கல்வி சீர்த்திருத்தம் காரணமாக டிக்வெல்ல வித்தியாலயம் சிங்களமயமாக்கப்பட்டது. 1965ம் ஆண்டிற்குப்பின் தமிழ் பாடசாலையின் தேவை கருதி பல தமிழ் பிரமுகர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அவர்களுள் மூக்கையா JP, T.M.P.வாசுதேவன், கோ.செல்வராஜ், தங்கவேல் விஸ்வநாதன், ரொஸட் மகாதேவன், ரொக்கதன்ன சந்திர மோகன், மாயழகு பெரியசாமி, P. வேதாந்தமூர்த்தி ஆகியோர் நகரில் காணி கிடைக்காத போது ஹாலி-எல வீரசக்தி விநாயகர் ஆலய காணியை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

தூரநோக்கு
கற்றலில் ஊக்கமும் ஒழுக்க விழுமியங்களில் மேன்மையும், சமய, சமூக, கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களில் உயர்வும், நன்னெறி ஒழுகழும், நடத்தை மாற்றமும், சிந்தனை ஆற்றலும், ஆளுமை விருத்தியும் கொண்ட மாணவர்களை உருவாக்கல்